ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கட்சியை ஒன்றுபடுத்தும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பீர்-  கெஅடிலான் உறுப்பினர்களுக்கு அமிருடின் வேண்டுகோள்

பெட்டாலிங் ஜெயா, மே 15- கெடிலான் கட்சியை ஒன்றுபடுத்த உதவும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும்படி கட்சியின் சிலாங்கூர் மாநில தலைமைத்துவ மன்றத் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

கட்சியில் இருக்கும் குழுக்கள் தனித்தனியாக அல்லாமல் ஒன்று பட்டு செயல்படுவதை தேர்தலில் உறுப்பினர்கள் எடுக்கும் சரியான முடிவு உதவும் அவர் சொன்னார்.

தனியாக நின்று வெற்றி பெற முடியும் எனக் கூறிக் கொண்டு தனித்து ஓடுவது போல் பாவனை செய்யாமல் திறந்த மனதுடன் ஒன்றுபட்டு பலம் சேர்ப்பவர்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நாம் மாநிலங்களைத் தற்காத்துக கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று நேற்றிரவு கோத்தா டாமன்சாராவில் நடைபெற் சுங்கை பூலோ தொகுதியின் மெகா பேரணியில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.

வரும் பொதுத் தேர்தலில் அம்னோ, தேசிய முன்னணி போன்ற அனுபவம் வாய்ந்த எதிரிகளை கெஅடிலான் எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் நம்மிடையே ஒருமித்த கருத்து நிலவுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாம் மக்கள் சக்தியை ஒன்றிணைக்க வேண்டும், அவ்வாறு செய்ய வேண்டுமானால் நாம் பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய குழுக்களை ஒன்று திரட்ட வேண்டும் என்றார் அவர்.


Pengarang :