ஷா ஆலம், மே 16- சிலாங்கூர் தொழிலாளர் ஆக்கத்திறனளிப்பு பிரிவின் (யு.பி.பி.எஸ்.) ஜோப்கேர் வேலை வாய்ப்புத் திட்டம் வரும் இம்மாதம் 21 ஆம் தேதி உலு லங்காட்டில் நடைபெறுகிறது.
சிலாங்கூர் மாநில மக்களுக்கு சுமார் 3,000 வேலை வாய்ப்புகளை வழங்கும் இத்திட்டம் சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.
மாவட்ட நிலையிலான இந்த வேலை வாய்ப்பு பயணத் தொடர் திட்டம் கடந்த பிப்ரவரி 26 முதல் ஜூன் 25 வரை பத்து இடங்களில் நடைபெறுகிறது.
கோவிட்-19 காரணமாக வருமானத்தை இழந்த உயர், நடுத்தர மற்றும் குறைந்த திறன் கொண்டவர்களுக்கு மறுபடியும் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதை இந்த இந்த ஜோப்கேர் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 15 உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் சிலாங்கூரில் வேலையின்மை விகிதத்தைக் குறைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்வமுள்ள நபர்கள் https://uppselangor.wixsite.com/my-site என்ற அகப்பக்கம் மூலம் பதிவு செய்யலாம் .
ஜோப் கேர் வேலை வாய்ப்புத் திட்டம் நடைபெறும் இடங்கள் பின்வருமாறு:
• டெம்ஸ்னே மண்டபம், உலு லங்காட் (மே 21)
* ஸ்தாப்பாக், ஆயர் பானாஸ் பல்நோக்கு மண்டபம் (22 மற்றும் 23 மே)
• டேவான் தாமான் கோம்பாக் (4 ஜூன்)
• டேவான் டத்தோ ஹொர்மாட், தஞ்சோங் காராங் (ஜூன் 11 மற்றும் 12)
• டேவான் பந்திங் பாரு, கோல லங்காட் (ஜூன் 18)
• டேவான் ஸ்ரீ பெர்னாம், சபாக் பெர்ணம் (ஜூன் 25)