ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் நேற்று 1,817 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்

ஷா ஆலம், மே 23- நாட்டில் நேற்று கோவிட்-19 நோய் கண்டவர்கள் எண்ணிக்கை 1,817 ஆக குறைந்துள்ளது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 2,021 ஆக இருந்தது.

நேற்றைய தொற்றுகளுடன் சேர்த்து இதுவரை இந்நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 44 லட்சத்து 91 ஆயிரத்து 320 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

அவற்றில் தீவிரத் தன்மையுடைய நோயாளிகளின் எண்ணிக்கை 26,511 ஆகும். அவர்களில் 25,366 பேர் அல்லது 95.7 விழுக்காட்டினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 1,087 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் 40 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் 18 பேர் பி.கே.ஆர்.சி. எனப்படும் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு வரை கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய இரு மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதனுடன் சேர்த்து இந்நோய்த் தொற்று காரணமாக மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 35,643 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :