MEDIA STATEMENT

பள்ளி பஸ் மோதி 16 மாதக் குழந்தை மரணம்- சிப்பாங்கில் சம்பவம்

புத்ரா ஜெயா, மே 27- பள்ளி பஸ் மோதி 16 மாதப் பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த கோரச் சம்பவம் சிப்பாங், பண்டார் பாரு சாலாக் திங்கி, தாமான் அங்கிரிக்கில் நிகழ்ந்தது.

நேற்று பிற்பகல் 12.15 மணியளவில் பள்ளிச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய தன் மூத்த சகோதரியைப் பின்தொடர்ந்து சென்ற அக்குழந்தை பஸ்ஸின் அடியில் சிக்கி மரணமடைந்ததாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமாருள் அஸ்ரின் வான் யூசுப் கூறினார்.

தன் தங்கைத் தன்னைப் பின்தொடர்வதை அந்த மாணவி அறியாமலிருந்துள்ளார். அவரை ஏற்றிக் கொண்டு பஸ் புறப்பட்ட போது தவழ்ந்து வந்த அக்குழந்தை பஸ்ஸின் அடியில் சிக்கிக் கொண்டது என்று அவர் சொன்னார்.

தலை மற்றும் உடலில் கடுமையானக் காயங்களுக்குள்ளாகியிருந்த அக்குழந்தையை அவரின் சகோதரி மீட்டதாக அறிக்கை ஒன்றில் வான் கமாருள் தெரிவித்தார்.

அக்குழந்தை உடனடியாக சாலாக் சுகாதார மையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது. எனினும், அக்குழந்தை மரணமடைந்து விட்டது அங்கு உறுதி செய்யப்பட்டது என்றார் அவர்.


Pengarang :