ECONOMYHEALTHSELANGOR

நாளை சுங்கை பூரோங், பெர்மாதாங் மற்றும் சிஜாங்காங் சட்டமன்றத்தில் சுகாதார பரிசோதனை

ஷா ஆலம், ஜூன் 11: சிலாங்கூர் (சாரிங்) என்னும் மருத்துவ பரிசோதனை திட்டத்தின் மூலம் நாளை இலவச சுகாதாரப் பரிசோதனையில் கலந்துகொள்ள மூன்று மாநில சட்டமன்றத்திலுள்ள  மக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

சிஜாங்காங் சட்டமன்றத்தில் வசிப்பவர்கள் கம்போங் மேடான் வாவாசான் மண்டபத்திலும், பெர்மாதாங் மற்றும் சுங்கை பூரோங் சட்டமன்றங்களில் இருப்பவர்கள் கம்போங் ஸ்ரீ திராம் ஜெயா பொது மண்டபத்திலும் கலந்து கொள்ளலாம்.

உடல்நலப் பரிசோதனையைத் தவிர, பெர்மாத்தாங் சட்டமன்றத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இலவச கண் பரிசோதனை திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலவச கண்ணாடிகளைப் பெறுவதற்கான நிபந்தனைகளில், பங்கேற்பாளர்கள் சிலாங்கூர் சாரிங் 2022 திட்டத்தில் பங்கேற்க வேண்டும் மற்றும் அவர்கள் பெர்மாத்தாங் சட்டமன்றத்தில் வாக்காளர்களாக இருக்க வேண்டும்.

சிலாங்கூர் சாரிங்கின் வெற்றிக்காக மாநில அரசு RM34 லட்சத்தை ஒதுக்கியுள்ளது, இது 39,000 குடும்ப மருத்துவ குறைபாடுகள், உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை வரலாறு கொண்ட குடியிருப்பாளர்களுக்கு பயனளிக்கும்.


Pengarang :