ஷா ஆலம், ஜூன் 16– அனைத்து ரெப்பிட் கே.எல். சேவைகளுக்கு இன்று தொடங்கி ஒரு மாத காலத்திற்கு கட்டணமில்லா பயணச் சலுகை வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
புத்ரா ஜெயா தடத்திற்கான எம்.ஆர்.டி. முதல் கட்டச் சேவை இன்று தொடங்குவதை முன்னிட்டு எம்.ஆர்.டி., எல்.ஆர்.டி.எனப்படும் இலகு ரயில் சேவை, ரெப்பிட்கே.எல். பஸ் சேவை, பி.ஆர்.டி. எனப்படும் ரெப்பிட் டிரான்சிட் ரயில் சேவை ஆகியவற்றுக்கு இலவச கட்டண சலுகை வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
இரு கட்டங்களாக மேம்படுத்தப்படும் இந்த எம்.ஆர்.டி. சேவை க்வாசா டாமன்சாரா மற்றும் புத்ரா ஜெயா இடையே பயணச் சேவையை வழங்குகிறது. இச்சேவையின் மூலம் சுமார் 20 லட்சம் பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
க்வாசா டாமன்சாரா நிலையத்திலுள்ள அதே பிளாட்பாரத்தை பயன்படுத்தி காஜாங் தடத்திற்கான பயணத்தை மேற்கொள்வதற்கு இத்திட்டத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதலாவது மற்றும் இறுதி நிலையங்களை இணைப்பதற்கு ஏதுவாக கோ-கேஎல் பஸ் சேவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இரயில் சேவைத் திட்டம் கடந்தாண்டு ஆகஸ்டு மாதத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், திட்டப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இச்சேவை ஒத்தி வைக்கப்பட்டது.
இத்திட்டம் முழுமையாக பூர்த்தி அடைந்த பின்னர் 36 நிலையங்களைக் கொண்டிருக்கும் இந்த தடம்
குக்வாசா டாமன்சாராவிலிருந்து புத்ரா ஜெயா வரையிலான 57.7 கிலோ மீட்டர் தொலைவுக்கு சேவை வழங்கும்.