ECONOMYSELANGOR

ஏழு வீடுகளைச் சீரமைக்க புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் நிதியுதவி

ஷா ஆலம், ஜூன் 24- கோல சிலாங்கூர், பாகான் தஞ்சோங் கிராமாட் பகுதியில் ஏழு வீடுகளை சீரமைப்பு செய்வதற்கு புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் உதவி புரிந்துள்ளார்.

சம்பந்தப்பட்ட வீடுகளில் சிறிய அளவிலான பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அதன் குடியிருப்பாளர்களுக்கு தலா 500 வெள்ளி வழங்கப்பட்டதாக ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.

அப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் நீர் பெருக்கு காரணமாக அவ்வீடுகள் மோசமாக சேதமடைந்துள்ளதை அங்கு நேரில் மேற்கொண்ட ஆய்வில் தெரிந்து கொண்டேன்.

அந்த வீடுகளில் தரைப்பகுதியில் உள்ள பலகைகளை மாற்றுவதற்காக இந்த நிதியை வழங்கியுள்ளோம் என்று அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.

இந்த உதவி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதார சுமையை ஓரளவு குறைக்க உதவும் என தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :