ECONOMYNATIONAL

லைசென்ஸ் இல்லாத நபர்களை  காரோட்ட அனுமதித்த  உரிமையாளர்கள் மீது, 55,000  குற்றப் பதிவுகள்கள்

சுக்கை, ஜூன் 25 – இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை மொத்தம் 55,000 வாகன உரிமையாளர்கள் லைசென்ஸ் இல்லாத நபர்களைளை தங்கள் வாகனங்களை ஓட்ட அனுமதித்துள்ளது கண்டறியப்பட்டது.

சாலைப் போக்குவரத்துத் துறை (ஆர்திடி) துணை தலைமை இயக்குநர் (திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள்) ஏடி ஃபேட்லி ரம்லி கூறுகையில், பெரும்பாலான குற்றங்களில் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக பெற்றோர்கள், மைனர்கள் உட்பட தங்கள் குழந்தைகளை பல்வேறு காரணங்களுக்காக உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட அனுமதித்தனர்.

இது சம்பந்தமாக, ஏடி ஃபேட்லி பொதுமக்கள் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் குற்றம் செய்தவர்கள் மீது RM3,000 அபராதம் அல்லது மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 26 (1) இன் கீழ் வழக்கு தொடரலாம்.

“அது தவிர, அதே சட்டத்தின் 64(1) பிரிவின் கீழ் ஆர்திடி அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்யலாம்,” என்று அவர் கூறினார்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் அல்லது காலாவதியான உரிமத்துடன் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 133 வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.


Pengarang :