ECONOMYSELANGOR

ஐந்து இடங்களில் மலிவு விற்பனை- வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள பொதுமக்களுக்கு வேண்டுகோள்

ஷா ஆலம், ஜூலை 5- இன்று தொடங்கி வரும் 8 ஆம் தேதி வரை நடைபெறும் ஹாஜ்ஜூப் பெருநாள் மலிவு விற்பனையில் பங்கேற்று பயனடையுமாறு சிலாங்கூர் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பெருநாளை முன்னிட்டு புதிய பொருள்களை குறைந்த விலையில் பெறுவதற்குரிய வாய்ப்பினை இந்த மலிவு விற்பனைத் திட்டம் வழங்குவதாக விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

சிலாங்கூர் மக்களே இந்த வாய்ப்பினை தவறவிட வேண்டாம். ஒரு கோழி குறைந்த பட்சம் 15.00 வெள்ளிக்கு விற்கப்படுகிறது. ஒரு தட்டு முட்டை 12.00 வெள்ளிக்கு இங்கு கிடைக்கும். ஒரு கிலோ சமையல் எண்ணெய் 2.00 வெள்ளிதான். மேலும் அதிகமான பொருள்கள் நியாயமான விலையில் விற்கப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

இந்த மலிவு விற்பனை இன்று சிஜங்காங், தாமான் பெர்வீராவில் தொடங்குகிறது. நாளை 6 ஆம் தேதி புக்கிட் பெருந்தோங், ஜாலான் கந்தான் 2 பகுதியிலும் 7 ஆம் தேதி தஞ்சோங் சிப்பாட், டத்தாரான் பத்து லாவுட்டிலும் இந்த விற்பனை இயக்கம் நடைபெறும்.

கோம்பாக், தாமான் கோம்பாக் பெர்மாய் மற்றும் பண்டான் இண்டா, பங்சாபுரி இனாய் ஆகிய இடங்களில் வரும் 8 ஆம் தேதி இந்த விற்பனை இயக்கம் ஏக்காலத்தில் நடைபெறும்.

காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறும் இந்த விற்பனை இயக்கத்தில் அரிசி, மாவு, போத்தலில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய், சீனி ஆகிய உணவுப் பொருள்களும் கிடைக்கும்.


Pengarang :