ECONOMYSELANGOR

வேலை வாய்ப்பு திட்டம் இலக்கை அடைந்தது, கிட்டத்தட்ட 2,000 நபர்கள் வேலை பெற்றனர் – ஆட்சிக்குழு உறுப்பினர்

ஷா ஆலம், ஜூலை 6: ஜூன் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டின் சிலாங்கூர் மெகா வேலை வாய்ப்புத்  திட்டத்தின் மூலம் மொத்தம் 1,996 நபர்கள் வேலை பெற முடிந்தது.

மனித மூலதன மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஒத்மான் கூறுகையில், இன்று வரை மொத்தம் 3,601 நபர்கள் இரண்டாவது நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு பணியமர்த்துபவர்களால் அழைக்கப்பட்டுள்ளனர்.

 “இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு 8,201 நபர்கள் வருகை தந்துள்ளனர்,” என்று அவர் இன்று ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

சிலாங்கூர் மெகா வேலை வாய்ப்பு கண்காட்சி 2022 ஜூன் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் எம்பிஎஸ்ஏ மாநாட்டு மையத்தில் முதல் முறையாக அரசு அமைப்புகள் மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

பங்கேற்கும் நிறுவனங்களில் கும்புலன் பெராங்சாங் சிலாங்கூர், டைகின் மலேசியா  சென்.பெர்ஹாட், டிஎச்எல் எக்ஸ்பிரஸ், டிஆர்பி ஹைக்கோம், ஜயண்ட் மலேசியா, மலாயான் பேங்கிங் பெர்ஹாட் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கு கொள்கின்றன.

மீடியா பிரிமா டிஜிட்டல், புரோட்டோன், பெரசாரானா மலேசியா பெர்ஹாட், ஷோப்பி மலேசியா, ஸ்போர்ட் டைரைக்ட் சென். பெர்ஹாட், டோயோட்டா ஆட்டோ போடி மலேசியா பெர்ஹாட் ஆகியவையும் வேலை வாய்ப்பை வழங்கும் இதர நிறுவனங்களாகும்.


Pengarang :