ECONOMYSELANGOR

ஹாஜ்ஜூப் பெருநாள்- வசதி குறைந்தவர்களுக்கு உதவ பண்டான் இண்டா தொகுதி வெ.25,000 ஒதுக்கீடு 

ஷா ஆலம். ஜூலை 7– வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் ஹாஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு பாண்டான் இண்டா தொகுதி ஏற்பாட்டில் 470 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.

பாண்டான் பரிவுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த உணவுக் கூடை விநியோகத் திட்டத்திற்கு 25,000 வெள்ளி செலவிடப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

குறைந்த வருமானம் பெறுவோர் பெருநாளைக் கொண்டாடுவதில் இந்த உதவித் ஓரளவு துணையாக இருக்கும். உண்மையில் உதவி தேவைப்படும் வசதி குறைந்தவர்களுக்கு மட்டுமே இந்த உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன என்று அவர் சொன்னார்.

பொருள்களின் விலை கட்டுப்பாடின்றி உயர்ந்து வரும் தற்போதைய சூழலில் இந்த பொருளுதவி அவர்களின் சுமையை ஓரளவு குறைக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாளின் போது பண்டான் இண்டா தொகுதியைச் சேர்ந்த சுமார் 500 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.


Pengarang :