ECONOMYSELANGOR

நடமாடும் மதிப்பீட்டு வரி வசூலிப்பு முகப்பிடம் வாரம் 7 நாட்களும் திறந்திருக்கும்- எம்.பி.எஸ். அறிவிப்பு

ஷா ஆலம் ஜூலை 7 – செலாயாங் நகராண்மை கழகத்தின் நடமாடும் மதிப்பீட்டு வரி வசூலிப்பு முகப்பிடம் இம்மாதம் தொடங்கி வரும் ஆகஸ்டு 31 ஆம் தேதி வரை வாரம் ஏழு நாட்களும் திறந்திருக்கும்.

வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை உள்பட அனைத்து தினங்களிலும் அந்த முகப்பிடம் செயல்படும் என்று நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாண்டு இரண்டாம் தவணைக்கான மதிப்பீட்டு வரியைச் செலுத்துவதற்கான இறுதி நாள் வரும் ஆகஸ்டு 31 ஆம் தேதியாகும். வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் செலுத்தப்படும் மதிப்பீட்டு வரிக்கு தாமதமாக கட்டணம் செலுத்தியதற்கு அபராதமாக 20 வெள்ளி வசூலிக்கப்படும் என அது கூறியது.

மதிப்பீட்டு வரி தொடர்பான மேல் விபரங்களுக்கு03-61265800 இணைப்பு 5966/ 5961 /5964/ 5963 என்ற எண்களில் அல்லது  http://www.mps.gov.my  என்ற அகப்பக்கம் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :