ECONOMYNATIONAL

ஜோகூர்-சிங்கப்பூர் இடையேயான பாலத்தில்  12 வாகனங்களை மோதிய லாரி டிரைவர் கைது

ஷா ஆலம், ஜூலை 7: ஜோகூர்-சிங்கப்பூர் இடையேயான பாலத்தில்  இன்று காலை 12 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 34 வயது லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

மரத்தூள் ஏற்றிச் சென்ற லாரியின் தொழில்நுட்பக் கோளாறால் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என ஜோகூர் பாரு செலாத்தான் காவல்துறைத் தலைவர் கூறியதாக கொஸ்மோ ஆன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆறு வாகனங்கள் மலேசியாவில் பதிவு செய்யப்பட்டவை என்றும், மற்றவை சிங்கப்பூர் பதிவு எண்களை கொண்டது என்றும் உதவி ஆணையர் ரவூப் செலாமாட் விளக்கினார்.

“ஒரு லாரி, ஒரு பஸ், ஒரு வேன் மற்றும் ஒன்பது கார்கள் சம்பந்தப்பட்ட வாகனங்கள். இருப்பினும், (விபத்தில்) உயிர் இழப்பு அல்லது காயம் ஏற்படவில்லை, ”என்று அவர் கூறினார்.

சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 42ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.


Pengarang :