ஷா ஆலம், ஜூலை 14: மலேசிய சுகாதார அமைச்சகம் (MOH) அடுத்த ஆண்டு முதல் கன்னாபிடியோல் (CBD) எனப்படும் கஞ்சா அல்லது கன்னாபீஸ் அடங்கிய சில மருத்துவப் பொருட்களைப் பயன்படுத்த அனுமதித்துள்ளது.
மலேசிய சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய மருந்து ஒழுங்குமுறைப் பிரிவு (NPRA) ஆகியவற்றின் ஆரம்ப ஆய்வின் அடிப்படையில், அதன் பயன்பாடு சில நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவும் என்று கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
இருப்பினும், கன்னாபிடியோல் தயாரிப்புகளை மருத்துவ நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், ஒரு கிளினிக் அல்லது மருத்துவமனையில் மருத்துவரின் பரிந்துரை மூலம் மட்டுமே பெற முடியும் என்றும் கைரி கூறியதாக, உத்துசான் ஆன்லைன், இன்று தெரிவித்துள்ளது.
செய்திகள் தொடர்ந்து வரும்…