ECONOMYSELANGOR

எம்.பி.எஸ்.ஏ. ஏற்பாட்டில் ஷா ஆலம் ஏயோன் பேரங்காடியில் நாளை நடமாடும் முகப்பிடச் சேவை

ஷா ஆலம், ஜூலை 15- இங்குள்ள செக்சன் 13, ஏயோன் பேரங்காடியின் கார் நிறுத்துமிடத்தில் நடமாடும் முகப்பிடச் சேவையை ஷா ஆலம் மாநகர் மன்றம் நாளை நடத்தவுள்ளது.

‘ஷா ஆலம் ஒன் வீல்ஸ்‘ எனப்படும் இந்த நிகழ்வு  காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் தொடர்புப் பிரிவின் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

மாநகர் மன்றம் தொடர்புடைய பணிகளை அலுவலகத்திற்கு வராமல் வார இறுதி நாட்களில் எளிதான முறையில் மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்த முகப்பிடச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

மதிப்பீட்டு வரியைச் சரிபார்த்து செலுத்துவது, கார் நிறுத்துமிட அபராதங்களை செலுத்துவது, லைசென்ஸ் விண்ணப்ப நிலையை அறிந்து கொள்வது, புகார் தெரிவிப்பது போன்ற சேவைகள் இந்த முகப்பிடத்தில் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் வாயிலாக மக்களுக்கு வழங்கப்படும் சேவையை மேலும் ஆக்ககரமான முறையில் மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு மாநகர் மன்றத்திற்கு கிட்டும் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :