HEALTHMEDIA STATEMENTNATIONAL

கெஅடிலான் மாநாட்டிற்கு வருகை புரிந்த பேராளர் தங்கும் விடுதியில் மரணம்

ஷா ஆலம், ஜூலை 16- இங்குள்ள ஐ.டி.சி.சி. மாநாட்டு மையத்தில் நடைபெறும் கெஅடிலான் கட்சியின் பேராளர் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பேராளர் ஒருவர் நேற்றிரவு தங்கும் விடுதியில் உயிரிழந்தார்.

கெடா மாநிலத்தின் பெர்மோக்கைச் சேர்ந்த ஹஷிம் யூசுப் என்பவரே மரணமடைந்த அந்த பேராளாராவார் என்று கெஅடிலான் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

இன்று காலை கட்சியின் 16வது பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். கட்சியின் போராட்டத்தில் தொடக்க காலம் முதல் பங்கு கொண்ட தீவிர இயக்கவாதி அவர் என்றும் சைபுடின் வர்ணித்தார்.

வெகு தொலைவிலிருந்து அதாவது மெர்மோக்கிலிருந்து ஹஷிம் இங்கு வந்துள்ளார். தங்கும் விடுதிக்குச் சென்ற பின்னர் அவர் மரணமடைந்தார். போராட்டத்தின் போதே அவர் தனது இன்னுயிரை விட்டுள்ளார் என்று சைபுடின் மேலும் சொன்னார்.

எனினும், ஹஷிமின் மரணத்திற்கான காரணம் என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை.


Pengarang :