ECONOMYSELANGOR

சிலாங்கூரை மேம்படுத்தும் ஐந்தாண்டு வியூகம் ஜூலை 25ஆம் தேதி தாக்கல்

ஷா ஆலம், ஜூலை 25– இம்மாதம் 25 ஆம் தேதி மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள முதல் சிலாங்கூர் திட்டம் (ஆர்.எஸ்.-1) டிவி சிலாங்கூர் மற்றும் மீடியா சிலாங்கூர் பேஸ்புக் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இது தவிர 2011-2015 ஆண்டிற்கான இந்த  ஐந்தாண்டுத் திட்டம் தொடர்பான செய்திகளை சிலாங்கூர் கினி, சிலாங்கூர் ஜெர்னல் மாண்டரின் பதிப்பு இணைய ஏடுகளின் வாயிலாகவும் சிலாங்கூர் இன்று தமிழ்ப்பதிப்பின் மூலமாகவும் வாசகர்கள் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், இந்த முதல் சிலாங்கூர் திட்டம் பற்றிய முழு விபரங்கள் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்டு 3 வரையிலான சிலாங்கூர் கினி வாரப் பதிப்பிலும் வெளியிடப்படும்.

எதிர்காலச் சவால்களைக் சமாளிக்கக்கூடிய ஆற்றல்மிக்க அரணாக முதல் சிலாங்கூர் திட்டம் விளங்கும் என்று மந்திரி புசார் அமிருடின் ஷாரி கூறினார்.

வரும் 2025இல் சிலாங்கூரை விவேக மாநிலமாக்கும் இலக்கிகேற்ப மிகவும் கவனமாக உருவாக்கப்பட்ட இந்த திட்டம் ஒரு “வாழும் ஆவணமாக“ (நடப்புச் சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டத் திட்டம்) விளங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

 

 


Pengarang :