ECONOMYHEALTHSELANGOR

இன்று மேருவிலும், நாளை பெட்டாலிங் ஜெயாவிலும் இலவச மருத்துவ பரிசோதனைகள்  நடைபெறும்,

ஷா ஆலம், ஜூலை 23: இலவச மருத்துவ பரிசோதனை திட்டமான சிலாங்கூர் சாரிங் இன்று கிள்ளான்  மேருவில்  இரண்டு இடங்களிலும்  நடைபெறும்.

ஜாலான் ஹாசனில் உள்ள மேரு பல்நோக்கு மண்டபம் மற்றும் அகாமா தொடக்கப்பள்ளியிலும் நிகழ்ச்சி நடைபெறும் என்று பேஸ்புக் வழியாக பொதுச் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

இதே நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயாவின் எம்பிபிஜே பவுல்வர்டில் தொடரும் என்றும் டாக்டர் சித்தி மரியா மாமுட் தெரிவித்தார்.

“கிள்ளான் மற்றும் பெட்டாலிங்கிற்கு அருகில் நீங்கள் வசிப்பவராக இருந்தால், சம்பந்தப்பட்ட இடத்தில் இலவசமாக இந்த சுகாதார பரிசோதனை மேற்கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

மேலும் தகவலை http://selangorsaring.selangkah.my வழியாகக் காணலாம் அல்லது Selcare 1-800-22-6600 ஐ அழைக்கவும்.


Pengarang :