HEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் முன்னாள் மந்திரி புசார் காலிட் இப்ராஹிம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

ஷா ஆலம், ஜூலை 24- சிலாங்கூர் முன்னாள் மந்திரி புசார் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிம் தலைநகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலிட் இப்ராஹிம் உடல் நிலை வெளி தொடர்புகளிலிருந்து முற்றாக விலகியிருக்க வலியுறுத்துவதோடு மருத்துவமனை நிர்வாகமும் கடுமையான செயலாக்க நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) அமல்படுத்தியுள்ளதால் அவரைச் சொன்று காண குடும்பத்தினர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக பேஸ்புக் தகவல் கூறியது.

டான்ஸ்ரீ காலிட் நலம் பெறுவதற்காக பிரார்த்திக்கும் அவரின் நண்பர்கள் மற்றும் மலேசியர்களுக்கு அன்னாரின் சார்பில் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டான்ஸ்ரீ காலிட்டைக் காண்பதற்கு அவரின் நெருங்கிய நண்பர்களிடமிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. அவர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அவரின் குடும்பத்தினர் கூறினர்.


Pengarang :