ஷா ஆலம், ஜூலை 27: கிள்ளான் பள்ளத்தாக்கு உட்பட பல பகுதிகளில் இன்று மின் விநியோக தடை ஏற்பட்டது.
சிராஸ், சுபாங், அம்பாங், கெப்போங், ஹர்தாமாஸ் மற்றும் புக்கிட் டமன்சாரா, கோத்தா பாரு, கிளந்தான், குவாந்தான் மற்றும் பகாங் ஆகிய இடங்கள் சம்பந்தப்பட்டதாக பயனர் புகார்களின் அடிப்படையில் மலேசியாகினி அறிக்கை தெரிவித்தது.
இதற்கிடையில், தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப் பட்டதை உறுதிப்படுத்தியது மற்றும் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து விநியோகத்தை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
“விநியோக இடையூறுகளின் போது பயனர்கள் அனுபவிக்கும் சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று பேஸ்புக் மூலம் ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.