ECONOMYSELANGOR

டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் மறைவா? அது தவறான செய்தி! -முகநூல் வாயிலாக விளக்கம்

ஷா ஆலம், ஜூலை 29- சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி புசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் காலமானதாக வெளிவந்த செய்தி வெறும் வதந்தியே என அறிவிக்கப்பட்டுள்ளது.

டான்ஸ்ரீ காலிட் கோலாலம்பூரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக அவரது முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த முன்னாள் மந்திரி புசார் காலமானதாக சமூக ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை மறுக்கும் விதமாக அவரது முகநூலில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த செய்தி இடம் பெற்றுள்ளது.

டான்ஸ்ரீ காலிட் மறைந்து விட்டதாக நேற்றிரவு வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை. இக்கட்டான சூழலில் உள்ள அவரின் குடும்பத்தாரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இத்தகைய பொய்ச் செய்திகளை பரப்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என அந்த அறிக்கை கேட்டுக் கொண்டது.


Pengarang :