ECONOMYSELANGOR

எல்ஆர்ஏ லங்காட் 2 மீண்டும் இயங்குகிறது, நாளை இரவு நீர் விநியோகம் முழுமையாக மீட்டளிக்கப்படும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 11: லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு நிலையம் (எல்ஆர்ஏ) இன்று பிற்பகல் 3.30 மணிக்கு திட்டமிடப்பட்டபடி மீண்டும் இயங்குகிறது.

இதைத் தொடர்ந்து, மூன்று பிராந்தியங்களில் பாதிக்கப்பட்ட 397 பகுதிகளில் நாளை இரவு 8 மணிக்குள் நீர் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படும் என சிலாங்கூர் நீர் மேலாண்மை எஸ்டிஎன் பிஎச்டி (ஆயர் சிலாங்கூர்) எதிர்பார்க்கிறது.

“தண்ணீர் விநியோக முறை உறுதிப்படுத்தப்பட்ட உடன் சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம் பயனர்களுக்கு கட்டங்களாக விநியோகிக்கப்படும்” என்று நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.


Pengarang :