ALAM SEKITAR & CUACASELANGOR

வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினர்

ஷா ஆலம், ஆக 30- வெள்ளத்தின் போது வீட்டில் சிக்கிக் கொண்ட மூதாட்டி ஒருவரை தீயணைப்பு வீரர்கள் வெற்றிகரமாக காப்பாற்றினர். இச்சம்பவம் செமினி, ஜாலான் கம்போங் செமெந்தா செசாப்பான் கெலுபியில் நேற்று மாலை நிகழ்ந்தது.

இச்சம்பவம் தொடர்பில் தமது தரப்பு நேற்று மாலை மணி 7.17 அளவில் தகவலைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமீஸ் கூறினார்.

செமினி தீயணைப்பு நிலையத்திலிருந்து மீட்புக் குழு ஒன்று சுமார் பத்து நிமிட நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.

சம்பவ இடத்தை அடைந்த போது அவ்வீடு சுமார் ஒரு அடி வெள்ளத்தில் மூழ்கியிருந்ததைக் தீயணைப்பு வீரர்கள் கண்டனர். அவ்வீட்டிலிருந்த 68 வயது மூதாட்டி உடனடியாக அங்கிருந்து காப்பாற்றப்பட்டு உறவினர் வீட்டில் சேர்க்கப்பட்டார் என அறிக்கை ஒன்றில் நோராஸாம் தெரிவித்தார்.


Pengarang :