ஷா ஆலம், 3 செப்டம்பர்: மாநில அரசு நாளை ஏற்பாடு செய்துள்ள இலவச மருத்துவ பரிசோதனையில் கலந்து கொள்ள காஜாங் மற்றும் தஞ்சோங் சிப்பாட் குடியிருப்பாளர்களுக்கு டத்தோ மந்திரி புசார் அழைப்பு விடுத்துள்ளார்.
செலாங்கா செயலியின் மூலம் பதிவு செய்யலாம் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பேஸ்புக் மூலம் தெரிவித்தார்.
நிகழ்ச்சி டேவான் ஸ்ரீ செம்பாகா, சௌஜானா இம்பியன், உலு லங்காட் (காஜாங் சட்டமன்றம்) மற்றும் டேவான் ஸ்ரீ குண்டாங், கம்போங் குண்டாங் (தஞ்சோங் சிப்பாட் சட்டமன்றம்) ஆகிய இடங்களில் நடைபெறும்.
“ஸ்ரீ கெம்பாங்கன், கோலா குபு பாரு, பாத்தாங் காலி, காஜாங் மற்றும் தஞ்சோங் சிப்பாட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த வார இலவச மருத்துவ பரிசோதனையானது ஆரம்பகால இதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் மற்றும் பிறவற்றைக் கண்டறியும் வாய்ப்பை வழங்குகிறது.