ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19: 1,307 புதிய சம்பவங்கள் மற்றும் ஐந்து இறப்பு பதிவு

ஷா ஆலம், செப்டம்பர் 20: நாட்டில் தினசரி கோவிட் -19 நோய்த்தொற்றுகள் நேற்று 332 சம்பவங்கள் குறைந்து 1,307 சம்பவங்களாக பதிவாகியுள்ளன.

கோவிட்நவ் அகப்பக்கத்தின் தரவுகளின்படி, புதிய சம்பவங்களின் அதிகரிப்பு, தொற்றுநோய் தொடக்கத்திலிருந்து மொத்த எண்ணிக்கையை 4,820,197 ஆகக் கொண்டுவருகிறது.

நேற்றைய நிலவரப்படி, 25,083 செயலில் உள்ள சம்பவங்கள் 23,866 சம்பவங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவை, 1,160 சம்பவங்கள் மருத்துவமனையில் சிகிச்சை, 55 சம்பவங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) மற்றும் இரண்டு சம்பவங்கள் தற்காலிக தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கூடுதலாக, நாடு முழுவதும் தீவிர சிகிச்சை பிரிவு வசதிகளின் பயன்பாட்டு விகிதம் 61.9 விழுக்காடாக உள்ளது, அதில் கோவிட்-19 சம்பவங்கள் 15 விழுக்காடாக உள்ளன.

நேற்றைய நிலவரப்படி, மருத்துவமனைக்கு வெளியே ஒரு இறப்பு உட்பட ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன, தொற்று நோயால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,317 ஆகும்.


Pengarang :