ECONOMYSELANGOR

தீபாவளி பற்றுச் சீட்டுகளுக்கு விண்ணப்பம் செய்ய பாண்டான் இண்டா தொகுதி மக்களுக்கு வேண்டுகோள்

ஷா ஆலம், செப் 21– தீபாவளியை முன்னிட்டு வசதி குறைந்தவர்களுக்கு மாநில அரசு வழங்கும் 100 வெள்ளிக்கான ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை பெறுவதற்கு விண்ணப்பம் செய்யும்படி பாண்டான் இண்டா தொகுதியிலுள்ளவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தலா 100 வெள்ளி மதிப்புள்ள இந்த பற்றுச் சீட்டுகளைப் பெறுவதற்கு  https://forms.gle/qdEJVywBMrqKc4Wb9 என்ற அகப்பக்கம் வாயிலாக இம்மாதம் 12 ஆம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 26 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என பாண்டான் தொகுதி சேவை மையம் கூறியது.

இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வோர் மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக குடும்ப வருமானம் பெறுபவர்களாகவும் மலேசிய பிரஜைகளாகவும் பாண்டான் இண்டா தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த பற்றுச் சீட்டுகளைப் பெறத் தகுதி உள்ளதாக தொகுதி சேவை மையம் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டது.

பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வுத் திட்டம் மற்றும் எஸ்.எம்.யு.இ. எனப்படும் மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டத்தின் கீழ் உதவிப் பெறாதவர்கள் மட்டுமே இந்த ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டு திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.

இந்த ஜோம் ஷோப்பிங் திட்டம் தொடர்பில் மேல் விபரங்கள் பெற விரும்புவோர் லிசா ஜாய்ன் (019-2855558) அல்லது விமலா (012-3638751) ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :