ECONOMYSELANGOR

சுங்கை துவா சட்டமன்றத்தில் நடைபெற்ற விற்பனையில் கிட்டத்தட்ட 500 குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டனர்

கோம்பாக், செப்டம்பர் 30: சுங்கை துவா சட்டமன்ற ஏசான் மக்கள் விற்பனை திட்டத்தில் கிட்டத்தட்ட 500 குடியிருப்பாளர்கள் மலிவாக விற்கப்படும் அடிப்படை பொருட்களை வாங்க வந்தனர்.

இங்கு கம்போங் லக்சமனாவில் உள்ள பிளாட் லக்சமனாவில் நடைபெற்ற நிகழ்ச்சி காலை 9 மணிக்குத் தொடங்கினாலும், 7.30 மணிக்கே மக்கள் வரிசையில் நிற்கத் தொடங்கினர்.

சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டு கழகத்தின் (பிகேபிஎஸ்) உதவி சந்தைப்படுத்தல் மேலாளர் முகமது ஹஸ்ரி அபு ஹாசன் கூறுகையில், பெறப்பட்ட ஆதரவைத்  தொடர்ந்து, அட்டவணையிட்ட நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே  மலிவு விற்பனை தொடங்கியது.

விற்கப்படும் பொருட்களின் வகைகளை அதிகரிப்பது உட்பட அடுத்த ஆண்டு இந்த முயற்சியை தொடரவும் என்றும் குடியிருப்பாளர்கள் பரிந்துரைத்ததாக அவர் கூறினார்.


Pengarang :