ECONOMYSELANGOR

மலிவான கோழி, முட்டை மற்றும் அரிசி விற்பனை நாளை 9 இடங்களில் தொடர்கிறது

ஷா ஆலம், 7 அக்: மாநில அரசு வழங்கும் அடிப்படைப் பொருட்களின் விற்பனை மேலும் ஒன்பது இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மீண்டும் தொடங்கும்.

மக்கள் ஏசான் விற்பனை திட்டம் நாளை ரவாங்கில் ஜாலான் ரவாங், கம்போங் மெலாயு 16  (தாமான் தெம்ப்ளர் சட்டமன்றம்),  தாமான் பெர்மாத்தாவில் ஜாலான் பெர்மாத்தா 4, மக்கள் கூடம் வாகன நிறுத்துமிடம் (உலு கிள்ளான் சட்டமன்றம்), டேவான் கூனிங், கம்போங் தாசிக் தம்பஹான் (லெம்பா ஜெயா சட்டமன்றம்), தாசிக் தாமான் ஸ்ரீ செர்டாங் (ஸ்ரீ செர்டாங் சட்டமன்றம்) ஆகிய இடங்களில் நடைபெறும்.

டேவான் மெலாதி செக்சன் 7(கோத்தா அங்கேரிக் சட்டமன்றம்), ஷா ஆலம் செக்சன் 19  ஹோட்டல் டி பல்மா பின்புறத்தில், இரவு சந்தை தலம்(பத்து திகா), பெக்கான் மேருவில் டேவான் எம்பிகே மேரு(மேரு சட்டமன்றம்), பண்டார் புக்கிட் திங்கி 2 அடுக்குமாடி குடியிருப்பு பகுதி (செந்தோசா சட்டமன்றம்), மற்றும் புத்தெரி சென்ட்ரல் பார்க் ( குவாங் சட்டமன்றம்) ஆகிய இடங்களையும் இந்த விற்பனை திட்டம் உள்ளடக்கியது.

மலிவான விற்பனையின் மூலம், சுமார் 1.5 கிலோ கோழி RM10, புதிய திடமான மாட்டு இறைச்சி (ஒரு பேக் RM10) மற்றும் முட்டைகள் (ஒரு பலகை RM10) விலையில் விற்கப்படும்.

சிலாங்கூர் விவசாய வளர்ச்சிக் கழகம் (பிகேபிஎஸ்) செலாயாங் மற்றும் கானாங்கெளுத்தி மீன்கள் ஒரு பேக் RM6 விலையிலும், 5kg சமையல் எண்ணெய் (RM25) மற்றும் 5kg அரிசி (RM10) என்ற விலையிலும் வழங்குகிறது.

செப்டம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை 160 இடங்களை உள்ளடக்கிய அனைத்து 56 சட்டமன்றங்களில் மலிவான விற்பனையை வெற்றிகரமாக செய்ய மாநில அரசு RM1 கோடியை ஒதுக்கியுள்ளது.

ஏசான் மக்கள் விற்பனை திட்டத்தின் இருப்பிடம் பற்றிய தகவலை https://linktr.ee/myPKPS இணைப்பைப் பார்வையிடுவதன் மூலமும் பெறலாம்.


Pengarang :