ECONOMYSELANGOR

கேபிஎஸ் பெர்ஹாட்டின் பராமரிப்பாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் 155 பராமரிப்பாளர்கள் பயிற்சி பெற்றனர்

கோலாலம்பூர், அக்டோபர் 7 – கும்புலான் பெராங் சாங் சிலாங்கூர் பெர்ஹாட் (கேபிஎஸ்) தனது பராமரிப்பாளர் பயிற்சித் திட்டத்தை 2019 இல் அறிமுகப்படுத்தியதில் இருந்து 155 சுயாதீன பராமரிப்பாளர்களுக்கு’’ முதியோர் பராமரிப்புப் பயிற்சியை’’ அளித்துள்ளது.

அதன் துணை தலைமை நிர்வாக அதிகாரி (நிதி மற்றும் கார்ப்பரேட் சேவைகள்), சுசிலா கைருடின், வாழ்க்கை உதவி, வயது வந்தோர் பகல்நேர பராமரிப்பு, நீண்ட கால பராமரிப்பு, முதியோர் இல்லம், நல்வாழ்வு மற்றும் வீட்டு பராமரிப்பு ஆகிய முதியவர்களின் சிறப்பு மற்றும் தனித்துவமான தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது.

“கோட்பாட்டு வகுப்புகளுக்கு, பங்கேற்பாளர்கள் கேலிட்டி கேர் மலேசியாவின் கீழ் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களை கொண்டு கற்பிக்கப்படுகிறார்கள், அதே நேரத்தில் மூத்த குடிமக்களுக்கான நடைமுறைப் பயிற்சி (பயிற்சியாளர்களுக்கு) அரசு சாரா நிறுவனங்களின் (என்ஜிஓக்கள்) நடத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

கேபிஎஸ் பராமரிப்பாளர் பயிற்சித் திட்டம், கேபிஎஸ் பெர்ஹாட்டின் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கத்துடன், பங்கேற்பாளர்களின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்தும் தொழில் திறன்கள் மற்றும் வணிகத் திட்டங்களை மேம்படுத்துகிறது.

சுயாதீன பராமரிப்பாளர்கள் மாதத்திற்கு RM1,500 க்கு மேல் சம்பாதிக்க முடியும் என அவர் கூறினார்.

இதற்கிடையில், கேபிஎஸ் பராமரிப்பு சேவை வழங்குநர் (கேர்கிவர்) பயிற்சித் திட்டத்தின் கீழ் கேலிட்டி கேர் மலேசியாவிற்கு பயிற்சியை ஏற்பாடு செய்ய நிதியுதவி மற்றும் தொடர்ச்சியான ஆதரவை வழங்கியதற்காக கேபிஎஸ் பெர்ஹாட்டுக்கு கேலிட்டி கேர் மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் கிம் நன்றி தெரிவித்தார்.

நேஷனல் டூயல் டிரெய்னிங் சிஸ்டம் திட்டத்தின் கீழ், கேலிட்டி கேரின் பயிற்சித் தொகுதிகளை தேசிய அங்கீகாரம் பெற்ற சான்றிதழாக மாற்றுவதற்கு, திறன் மேம்பாட்டுத் துறையால், கேலிட்டி கேர் மலேசியாவுக்கு முன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

“வரும் ஆண்டுகளில் அனைத்து பட்டதாரிகளின் பயிற்சி அறிவையும் தேசிய அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களாக மாற்றுவதற்கு கேபிஎஸ் உடனான எங்கள் உறவைத் தொடர்வது கேலிட்டி கேர் இன் எண்ணமாகும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :