ECONOMYHEALTHNATIONAL

நேற்று 1,210 புதிய கோவிட்-19 சம்பவங்கள்  பதிவு- அறுவர் உயிரிழப்பு

ஷா ஆலம், அக் 18- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 1,210 ஆகப் பதிவானது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 1,712 ஆக இருந்தது.

கோவிட்-19 பெருந்தொற்று நாட்டை தாக்கியது முதல் இதுவரை 48 லட்சத்து 68 ஆயிரத்து 402 இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்றைய நிலவரப்படி மொத்தம் 23,070 பேர் இந்நோயின் தீவிர பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களில் 22,002 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 1,002 பேர் மருத்துவமனையிலும் 43 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், நோயாளிகள் யாரும் தற்காலிக தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் அனுமதிக்கப்படவில்லை.

நாட்டில் நேற்று கோவிட்-19 தொடர்புடைய ஆறு மரணங்கள் பதிவு செய்யப்பட்டன.இதனுடன் சேர்த்து கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,423 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :