கால்பந்து  விளையாட்டு பயிற்சியாளர்களாக ஓர் அரிய வாய்ப்பு

ஷா ஆலம், ஆகஸ்ட் 22: கால்பந்து விளையாட்டு பயிற்சியாளர்களாக ஆர்வமுள்ளவர்களுக்குச் சிலாங்கூர் எஃப்சி வாய்ப்பை வழங்குகிறது.  

எலிட் திட்டங்களில் அனுபவம் உள்ளவர்கள் அல்லது இளம் வீரர்களுக்குப் பயிற்சி அளித்தவர்கள் இத்திட்டத்தின் வெற்றிக்கு அவசியம் என முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது. 

“செல்லுபடியாகும் சான்றிதழ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தகுதிகளைக் கொண்ட பயிற்சியாளர்கள், சிலாங்கூர் எஃப்சியில் ஒரு பகுதியாக சேர்ந்துக் கொள்ள முயற்சி செய்யலாம்,” என்று அவர் கூறினார்.

ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்


Pengarang :