ECONOMYMEDIA STATEMENTPBT

மேலும் மூன்று இடங்களில் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா விற்பனைத் திட்டம்

ஷா ஆலம், ஆகஸ்ட் 22: சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் (பிகேபிஎஸ்) ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா விற்பனைத் திட்டத்தை (ஜேஇஆர்) நாளை மேலும் மூன்று இடங்களில் தொடர்கிறது. இதில் அடிப்படைத் தேவையான பொருட்கள் மலிவு விலையில் விற்கப்படும்.

இந்நிகழ்ச்சி காலை 10 மணிக்கு ரிஞ்சிங் லோ காஸ்ட் குடியிறுப்பு பிரிவு 2 ஃபுட்சல் திடல், கம்போங் கெனாங்கனின் நூருல் ஹுடா மசூதி, சுபாங் ஜெயா மாநகராட்சி மற்றும் தாமான் கிள்ளான் ஜெயா இரவு சந்தை தளம், செந்தோசா ஆகிய இடங்களில் நடைபெறும். 

இந்த மலிவு விற்பனையானது முந்தைய ஜுவாலான் எஹ்சான் ரக்யாட் விற்பனையின் தொடர்ச்சியாகும், இது ஜூன் 1 ஆம் தேதி மறுபெயரிடப்பட்டது மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்துடன் (KPDN) இணைந்து அடுத்த டிசம்பர் வரை தொடரும்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும் ஒரு பாக்கெட் இறைச்சி 10.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


Pengarang :