செய்தி ; சு. சுப்பையா
சு.பூலோ.நவ.19- ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் மித்ரா தலவருமான டத்தோ இரமணன் இராமகிருஸ்ணன் நடத்திய தீபாவளி திறந்த இல்ல விருந்து உபசரிப்பில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு அதிகாரப்பூர்வமாக இன்று நண்பகல் 12.00 மணிக்கு பண்டார் பாரு சுங்கை பூலோவில் உள்ள பொது மண்டபத்தில் உருமி மேளம் முழங்க கோலாகலமாக தொடங்கியது.
சுமார் 12.30 மணிக்கு டத்தோ இரமணன் பொது மண்டபம் வந்தடைந்தார். அவரை இந்த பொது உபசரிப்பு குழுவின் பொறுப்பாளர்களில் ஒருவரான டத்தோ அன்புமணி மற்றும் ஐடிலும் வரவேற்றனர். தொடர்ந்து டத்தோ இரமணன் தலைமையில் அனைவரும் ஆள் உயர குத்து விளக்கு ஏற்றி வைத்து அதிகாரப்பூர்வமாக சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பை தொடங்கி வைத்தனர்.
மக்கள் நீதிக் கட்சியின் தலைவர்கள் பல்வேறு தொகுதிகளிலிருந்து வருகை தந்து சிறப்பித்தனர். கெப்போங் தலைவர் ஜெயகுமார், கெடா மெர்போக் தலைவர் பூபாலன், பகாங் தெமெர்லோ தலைவர் மகேந்திரன், பாகான் டத்தோ தலைவர் மனோகரன் மற்றும் மேலும் பல தொகுதிகளில் இருந்து வருகை தந்து கௌரவித்தனர்.
இதே போல் சிலாங்கூரில் இருந்து மீடியா சிலாங்கூர் அதிகாரி ஜஸ்தின், சித்தாம் அதிகாரி ஆர்.டி.சரவணன், சுங்கை பூலோ தலைவர் சிவராசா, கோத்தா டமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் இசுவான் காசிம், கோத்தா டமன்சாரா சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் சத்திரி மன்சோர், பயா ஜெராஸ் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கைருடின், சா ஆலம் நகராண்மைமன்ற் உறுப்பினர்கள், இந்திய சமுதாயத் தலைவர்களும் திரளாக கலந்துக் கொண்டனர்.
இந்திய பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. தோசை, பானிப் பூரி, வடை, முறுக்கு என தீபாவளி பலகாரங்கள் விருந்தினருக்கு வழங்கப் பட்டன.
தொடர்ந்து சிறப்பான இன்னிசை கலை நிகழ்ச்சியும் படைக்கப்பட்டன. மலாய் மற்றும் சீன பாடல்கள் மற்ற நடனமும் இடம் பெற்றன. மொத்தத்தில் பல்லின மக்கள் ஒற்றுமையாக கலந்து சிறப்பித்தனர்.
சுமார் 300 சிறார்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கப் பட்டன. ஒவ்வொருவருக்கும் தலா ரி.ம. 50.00 வழங்கப் பட்டன. மலாய், சீன, இந்திய சிறார்கள் தீபாவளி அன்பளிப்பை டத்தோ இரமணனிடமிருந்து பெற்றுக் கொண்டனர். நண்பகல் ஒரு மணிக்கு தீபாவளி அன்பளிப்பு கொடுக்க தொடங்கி மதியம் 3.00 மணி வரை கலந்துக் கொண்ட அனைத்து சிறார்களுக்கும் வழங்கினார்.
இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு கலந்துக் கொண்ட முதியவர்கள் மற்றும் தாய்மார்களுக்கு பெரிய முறுக்கு டப்பாவில் அடைக்கப்பட்ட முறுக்குகள் வழங்கப் பட்டன. சுமார் 200 பேர் இந்த முறுக்கை பெற்று சென்றனர்.
மேலும் கலந்துக் கொண்ட 20 பேருக்கு சிறப்பு அதிர்ஷ்ட குழுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
மூவின மக்களும் இந்த சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இரமணன் நடத்திய சிறப்பு தீபாவளி திறந்த் இல்ல உச்சரிப்பில் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிட தக்கது.
டத்தோ இரமணன் தலைமையில் உள்ள ஏற்பாட்டுக் குழுவினர் விருந்தினர்களை சிறப்பாக வரவேற்று, உபசரித்தனர்.
இந்த தீபாவளி திறந்த் இல்ல உபசரிப்பு மாலை 4.00 அளவில் நிறைவுற்றது