ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாமன்னர் தம்பதியினர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

கோலாலம்பூர், 24 டிச: மாட்சிமை தங்கிய பேரரசர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தபா பில்லா ஷா  மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் மலேசியாவில் உள்ள கிறிஸ்தவ சமூகத்திற்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தேசிய அரண்மனையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இன்று பதிவேற்றம் செய்யப்பட்ட செய்தியின் மூலம் மாட்சிமை தங்கிய  அவர்களின்  வாழ்த்து வெளியிடப் பட்டுள்ளது.

“இந்தப் பண்டிகை மலேசியாவில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சமூகங்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வைக் கொண்டு வரட்டும்” என்று இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

– பெர்னாமா


Pengarang :