SELANGOR

இவ்வார இறுதியில் மேலும் எட்டு இடங்களில் மலிவு விற்பனை தொடரும்

ஷா ஆலம், டிச 29: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப்
பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான்
ரஹ்மா திட்டம் இவ்வார இறுதியில் மேலும் எட்டு இடங்களில் காலை 10
மணிக்குத் தொடரும்.

சனிக்கிழமை அன்று பங்சாப்புரி செம்பாக்கா பிளாக் 6 (கோத்தா டாமன்சாரா), கொம்ப்ளெக்ஸ் பிகேனேஸ் பாங்கி ஃபுட்சல் மைதானம் (சுங்கை ராமால்), தாமான் பெர்மாய் சமூக மண்டபம் (செமினி) மற்றும் புகால் பாடி தாலி ஆயர் 1 (சுங்கை புரோங்) இடங்களில் மலிவு விற்பனை  நடைபெறும்.

மேலும், ஞாயிறு அன்று மலிவு விற்பனை கொம்ப்ளெக்ஸ் பெங்கூலு முக்கிம் உலு லங்காட் பத்து13 (டூசுன் துவா), தாமான் கெமிலாங் பொது மண்டபம் (டெங்கில்), டத்தோ அமாட் ரசாலி பல்நோக்கு மண்டபம் (செமெந்தா) மற்றும் கம்போங் மெலாயு சுங்கை பூலோ (பாயா ஜாராஸ்) ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (PKPS) கிட்டத்தட்ட 3000
இடங்களில் இந்த மலிவு விற்பனை நடத்தப்பட்டுள்ளது.   ஐந்து
மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த இச்சந்தைக்குச்
சிலாங்கூர் அரசு RM40 மில்லியன் மானியத்தைச் செலவிட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும்
மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை
ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00
வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


Pengarang :