MEDIA STATEMENTNATIONAL

மந்திரி புசார் நாளை அரசு ஊழியர்களுக்கு பிரத்தியேக உரையாற்றுவார்- மீடியா சிலாங்கூரில் நேரடி ஒளிபரப்பு

ஷா ஆலம்,  ஜன 14- மந்திரி  புசார் தனது  2024ஆம் ஆண்டிற்கான சிறப்பு செய்தியை வரும்  திங்கட்கிழமை மாநிலத்தின் அதிகாரப்பூர்வ நிர்வாக மையத்திலுள்ள  ஜூப்லி பேராக்  ஆடிட்டோரியத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்க உள்ளார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் அந்த சிறப்பு உரை காலை 8.00 மணி தொடங்கி அவரின் சிறப்பு முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பப்படும்.  மீடியா சிலாங்கூர் மற்றும் யூடியூப் சிலாங்கூர் டிவியிலும் அதனைக் காணலாம்.

சிலாங்கூர் கினி, சிலாங்கூர் ஜெர்னல், மாண்டரின் மற்றும் தமிழ் பதிப்புகளிலும் அவரது உரையின் உள்ளடக்கங்கள் விரிவாக வெளியிடப்படும்.


Pengarang :