புத்ராஜெயா, ஜூன் 26: தேர்தல் ஆணையத்தின் (EC) புதிய தலைவராக ஊரக மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹாருண் இன்று முதல் நியமிக்கப்பட்டார்.
அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ மொகட் ஷாக்கி அலி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசமைப்புச் சட்டத்தின் 114(1) பிரிவின்படி யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிம் இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
2020 முதல் பதவி வகித்து மே 9 அன்று ஓய்வு பெற்ற டான்ஸ்ரீ அப்துல் கானி சாலேவுக்கு, பதிலாக 60 வயதான ரம்லான், நியமிக்கப்பட்டார்.