நிபோங் திபால் – சுங்கை பாக்காப் மாநில சட்டமன்ற தொகுதிக்கு புதிய பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கு, பதிவு செய்யப்பட்ட 39,279 வாக்காளர்களில் 63.4 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்தனர்
காலை 8 மணிக்கு திறக்கப்பட்ட ஒன்பது வாக்கு மையங்களும் மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டதை அடுத்து, சுங்கை பாக்காப் மாநில இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது.
தாசேக் தேசியப் பள்ளி, பூன் பெங் சீன ஆரம்பப் பள்ளி, பண்டார் தாசேக் முத்தியாரா தேசியப் பள்ளி, ஸ்ரீ தாசேக் தேசியப் பள்ளி, சுங்கை டூரி தேசியப் பள்ளி, துன் சைட் சே பராப்பா தேசியப் பள்ளி, சுங்கை பாக்காப், ஜாவி தேசியப் பள்ளி மற்றும் சுங்கை கெச்சில் தேசியப் பள்ளி ஆகிய இடங்களில் அந்த ஒன்பது வாக்குச் சாவடிகளும் மூடப்பட்ட உடனேயே, 65 வாக்கு சாவடிகளில் இருந்து அனைத்து வாக்குப் பெட்டிகளும் இங்கு அருகிலுள்ள டேவான் செர்பகுனா ஜாவியில் உள்ள அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப் பட்டன.
இந்த இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் ஜூஹாரி ஆரிஃபின் 10222 வாக்குகள் பெற்ற வேளையில் பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) வேட்பாளர் அபிடின் இஸ்மாயில் 14 489 வாக்குகள் பெற்று 4267 வாக்குகள் வித்தியாசத்தில் நேரடி போட்டியில் வெற்றிப் பெற்றார்.