புத்ராஜெயா, ஜூலை 16: ப்ரிசிண்ட் 9ல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 16வது மாடியிலுள்ள வீட்டின் படுக்கையறையிலிருந்து தவறி விழுந்து நான்கு வயது சிறுமி உயிரிழந்தார்.
இன்று காலை 7.50 மணியளவில் அக்குழந்தை விழுந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு மெர்ஸ் 999 அவசர அழைப்பின் மூலம் தகவல் கிடைத்ததாக புத்ராஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் ஏ.சி.பி. ஏ. அஸ்மாடி அப்துல் அஜிஸ் கூறினார்.
சம்பவம் நிகழ்ந்த போது அக்குழந்தையின் தந்தை மூத்த மகளை அருகிலுள்ள பள்ளிக்கு அனுப்பச் சென்ற வேளையில் குழந்தையின் தாய் மழலையர் பள்ளி ஆசிரியை வேலைக்குச் சென்றிருந்ததாக அவர் தெரிவித்தார்.
இறந்த அச்சிறுமி இரண்டு உடன்பிறப்புகளில் இளையவர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.
குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காகு புத்ராஜெயா மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு கொண்டுச் செல்லப்பட்டது என அவர் தெரிவித்தார்.