ஷா ஆலம், மே 11:
செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) சுங்கை பூலோ இரவுச் சந்தை வியாபாரிகளுக்கு லைசென்சு கட்டணம் வசூலிக்கும் செய்தியை மறுத்தது. எம்பிஎஸ்-இன் தொடர்புதுறை இயக்குனர் முகமட் ஸைன் மாசூட் கூறுகையில், நகராண்மை கழகம் நிரந்தர கடைகளுக்கு மட்டும் லைசென்சு கட்டணம் விதிப்பதாக கூறினார்.
மேலும் கூறுகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட காரணம், வியாபாரிகளில் ஒருவர் எம்பிஎஸ்-க்கு லைசென்சு விண்ணப்பம் செய்தது தெரிய வந்துள்ளது. ஒன்பது நிரந்தரக் கடைகள் சுங்கை பூலோ கிராமத்து நடவடிக்கை குழு (ஜெகெகெகெ) அமைத்து, அதில் ஆறு கடைகள் 2007-இருந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நகர்புற சேவைகள் குறிப்பாக குப்பைகுப்பைகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்து விட்டோம்,” என்று கூறினார்
கடந்த மே 3-இல்,நகர்ப்புற சமுதாய போராட்டம இயக்கம் எம்பிஎஸ்-இன் லைசென்சு கட்டணம் அதிகமாக உள்ளது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும் கூறுகையில் அவர், மேற்கண்ட நடவடிக்கைகள் ஊராட்சி மன்ற சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எம்பிஎஸ் அமல்படுத்த விரும்புகிறது என்று கூறினார்.