ஷா ஆலம், ஜூலை 28:
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் வெற்றிக் கதைகள் கேட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் உணர்ச்சி வசப்படக் கூடாது என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். ஆனாலும், இந்த அனுபவங்களை எடுத்து கூறியதால் ஜோகூர் மற்றும் பேராக் மாநில நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் மன திருப்தி அடையாமல் களங்கிப் போய் விட்டனர் என்றார்.
” நான் ஜோகூருக்கு சென்றதால், காலீட் நோர்டின் திக்குமுக்காடி போய் விட்டார். அடுத்து பேராக்க்கு சென்ற போது ஸம்ரியும் களங்கி விட்டார். ஏன் என்னைக் கண்டு அச்சம் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் அவர்களின் பெயரைக் கூட சொல்லவில்லை. ஆனாலும் ஏன் பயந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது இது வரை எனக்கு புரியவில்லை. நான் சிலாங்கூரில் ஏற்பட்ட மாற்றங்களை பற்றி பேராக் மக்களுக்கு விளக்கம் அளிக்க முற்பட்டேன். இது தவரா?” என்று செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.
அஸ்மின் அலி, கோலா கங்சார் பிரச்சாரத்தில் பேராக் மாநிலத்தை மதிக்காமல் நாகரீகமாக நடந்து கொள்ளவில்லை என்று ஸம்ரி குற்றம்சாட்டியது அடிப்படையில் இப்படி கூறியது குறிப்பிடத்தக்கது.
#கேஜிஎஸ்