கோலா நேருஸ், அக்டோபர் 21:
அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் குற்றப்பிரிவின் தலைவர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்பிஆர்எம்) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஸூல்கிப்லி அமாட் மீது அமைக்கப்பட்ட விசாரணை குழுவை தலைமைப் பொறுப்பை ஏற்க இருக்கிறார். அண்மையில் சமூக வலைத் தளத்தில் ஸூல்கிப்லி பாலி உல்லாசத் தீவில் ஒரு பெண்ணுடன் இருந்ததாக படங்களுடன் வெளியிட்டுள்ள செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அட்டர்னி ஜெனரல் டான்ஸ்ரீ முகமட் அப்பெண்டி அலி தனது அதிகாரியின் பெயரை குறிப்பிடாமல் மலேசியாவில் நடைபெற்ற பல விசாரணையை இந்த குழு ஏற்கெனவே தலைமை ஏற்றதாக கூறினார்.
” குற்றப்பிரிவு தலைவரான அவர் நேரிடையாக என்னிடம் விசாரணை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்பார். ஆனால் இந்த நேரம் வரை சம்பந்தப்பட்ட விசாரணை தொடர்பாக எனக்கு ஒன்றும் தெரியவில்லை. இந்த வழக்கு விசாரணையை காவல்துறையிடம் விட்டு விடுகிறேன். சமூக வலைத் தளத்தில் வெளியான செய்திகளின் உண்மை நிலவரம் இன்னும் தெரியவில்லை. தவறான தகவல்களை பரப்பினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று பெர்னாமாவிடம் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
தகவல்: பெர்னாமா