டாக்கா, அக்டோபர் 22:
மலேசியா 35 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக ஆசிய கிண்ண இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது. அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மலேசியா அணி சமநிலை கண்டாலே இறுதி ஆட்டத்தில் நுழையும் நிலையில் தென் கொரியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகிக்கிற சூழலில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதற்கு முன்பு தேசிய அணி உலகக்கோப்பை போட்டியில் தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணியை வீழ்த்திய வேளையில், இந்திய அணியிடம் குழு அளவில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் வழி மலேசியா ஹாக்கி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இந்தியா அணியுடன் மோத இருக்கிறது.
#கெஜிஎஸ்