SELANGOR

எம்பிஎஸ்ஜே, எம்டிகெஎஸ் மற்றும் எம்டிஎச்எஸ் ஆகியவை புதிய தலைவர்களை பெறுகிறது

கோலா சிலாங்கூர், நவம்பர் 21:

உலு சிலாங்கூர் மாவட்ட மன்றத்தின் (எம்டிஎச்எஸ்) தலைவர் நோராய்னி ரோஸ்லான் சுபாங் ஜெயா நகராண்மை கழகத்தின் தலைவராக பதவி ஏற்க இருக்கிறார் என்று சிலாங்கூர் மாநில வீடமைப்பு, புதிய கிராம மேம்பாடு மற்றும் சட்ட விரோத தொழிற்சாலைகள் புனர்வாழ்வு ஆட்சிக் குழு உறுப்பினர் இயன் யோங் இயன் வா அறிவித்தார். கடந்த மாதம் நடந்த மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் இந்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தின் துணை மேயர் சுக்ரி முகமட் அமீன் உலு சிலாங்கூர் மாவட்ட மன்றத்தின் தலைவராகவும், கிள்ளான் மாவட்ட துணை ஆட்சியாளர் ரஹிமா ரஹ்மாட் கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றத்தின் தலைவராக நியமனம் பெற்றுள்ளது.

 

 

 

 

 

#வீரத் தமிழன்


Pengarang :