PBTSELANGOR

1,000-க்கும் மேற்பட்டோர் எம்பிஎஸ்ஜே-வின் சுகாதார விழாவில் கலந்து கொண்டனர்

சுபாங், மே 13:

சுபாங் ஜெயா நகராண்மை கழகத்தின் (எம்பிஎஸ்ஜே), சிலாங்கூர் சுகாதார விழா 2017 புத்ரா ஹாயிட்ஸ், பாஃமா விவசாய சந்தையில் நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு முறையே சுகாதார ஓட்டம் மற்றும் சுகாதார வாழ்க்கை வாழ சைக்கிளோட்டம் போன்றவை பொது மக்கள் சுகாதாரமான வாழ்க்கை வாழ வழி வகுக்கிறது.

சுபாங் ஜெயா நகராண்மை கழகத்தின் தலைவர், டத்தோ நோர் ஹிஷாம் அமாட் டாலான் கூறுகையில் இந்த இரண்டு பிரிவுகளும் காலை 7.30 மணிக்கு ஆரம்பித்தது என்று விவரித்தார். சிலாங்கூர் சுகாதார விழா மாநிலத்தின் சுகாதார நிரந்தரக் குழுவின் நிகழ்ச்சியாகவும் பொது மக்களிடையே சுகாதார வாழ்க்கை வாழ விழிப்புணர்வு முயற்சியாக அமைந்துள்ளது என்று கூறினார்.

மேலும் ஹிஷாம் கூறுகையில், இந்த நடவடிக்கையில் பொது மக்கள் நகராண்மை கழக  அதிகாரிகளோடு நல்ல பரஸ்பர  உறவை வளர்த்துக் கொள்ள உதவும் என்றார். எம்பிஎஸ்ஜே சுகாதார ஓட்டம் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் என்றும் மேலும் 300 பதக்கங்கள் தகுதி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டன என்று விவரித்தார். அவரோடு மாநில சமூக நல, சுகாதார, மகளிர் மற்றும் குடும்ப நலத்துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி மற்றும் சுபாங் ஜெயா மாவட்ட துணை காவல்துறை தலைவர், ஆணையர் சூ விலிருந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.


Pengarang :