ஷா ஆலம், ஆகஸ்ட் 1:
மேன்மை தங்கிய சிலாங்கூர் அரசர், சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா பிகேஎன்எஸ் அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாக இன்று திறந்து வைத்தார். சுல்தான் உடன் மேன்மை தங்கிய அரசியார் தெங்கு பெர்மைசூரி நோர்ஹாசிகீன் மற்றும் சிலாங்கூர் மாநில இளவரசர் மேன்மை தங்கிய தெங்கு அமீர் ஷா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அரச குடும்பத்தினருடன் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மற்றும் சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கழகம் (பிகேஎன்எஸ்) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நோர்ஹைடா முகமட் யூசோப் ஆகியோர் வரவேற்று உபசரித்தனர்.
சிலாங்கூர் சுல்தான் மற்றும் அரசியாரும் புதிய கட்டிடத்தில் உள்ள வசதிகளை பார்வையிட்டனர்.
4.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பிகேஎன்எஸ் தலைமையகம் நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
2017 ஆகஸ்ட் 1-இல் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்ட பிகேஎன்எஸ் தலைமையகம் இன்றோடு 53-வது வயதை எட்டிய பிகேஎன்எஸ் ஒட்டி அமைந்திருந்தது சிறப்பாகும்.