NATIONAL

திருவள்ளுவர் நாட்குறிப்பேடு

பெரும் வரவேற்பு பெற்று – தொடர்ந்து
நான்காம் ஆண்டாக வெளிவரும்
“திருவள்ளுவர் நாட்குறிப்பேடு”
மேலும் சிறப்புடன் வெளியாகிறது..!

 

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்காம் ஆண்டாக “திருவள்ளுவர் நாட்குறிப்பேடு” – வரும் திருவள்ளுவர் ஆண்டு 2049-க்கும் (2018) மேலும் சிறப்புடன் – செழுமையுடன் வெளியாகிறது!

ஒவ்வொரு பக்கத்திற்கும் தனித்தாள் என மொத்தமாக 400 பக்கங்கள்

ஒவ்வொரு தாளிலும், ஆண்டுக் குறிப்புகளோடு அந்த நாளுக்குரிய வரலாற்று நிகழ்வுகள்

உலகறிந்த தலைவர்கள் – தமிழர்களின் தொன்மையான சிந்தனையாளர்கள் ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் குறிப்புகள்

தமிழர் தலைவர்களின் சிந்தனைகள், மேற்கோள்கள்

நாடுகள் விடுதலை பெற்ற வரலாற்றுக் குறிப்புகள்

திருக்குறள், புறனாநூறு, பாரதிதாசன் வரையிலான உரையுடன் கூடிய நற்செய்திக் குறிப்புகள்.

ஒவ்வொரு நாளுக்கும் தமிழ் எண் மற்றும் தமிழ்த் தலைவர்களின் ஓவியங்கள்.

என தமிழ் கூறும் நல்லுலகத்திற்கென புதிய வடிவில் இந்நாட்குறிப்பேடு தயாராகிக் கொண்டுள்ளது!

அமைப்புகள் தங்கள் ஆதரவாளர்களுக்கும், குடும்பங்கள் தங்கள் உறவினர்களுக்கும் புத்தாண்டுப் பரிசாக இந்நாட்குறிப்பேட்டை வழங்கி மகிழலாம்! உங்கள் முத்திரையுடன் அவர்களது இல்லங்களை “திருவள்ளுவர் நாட்குறிப்பேடு” அலங்கரிக்கட்டும்!

வள்ளுவன் படிப்பகம்

தொலைப்பேசி : 010 980 2149


Pengarang :