செலாயாங்,ஜனவரி29:
தைப்பூசத்தை முன்னிட்டி பத்துமலை வளாகத்தில் வழங்கப்பட்டிருக்கும் கடை விவகாரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஓரங்கட்டப்பட்டிருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை.
ஒதுக்கப்பட்ட இடத்தை அனைவரும் மன நிறைவோடு பெற்றுக் கொண்ட வேளையில் ஒருவர் மட்டுமே தொடர்ந்து பிடிவாதம் செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.
மாற்றுத்திறனாளியான பிரன்சிஸ் சிவா தனக்கு முதன்மை நுழைவாயிலில்தான் கடை வேண்டும் என பிடிவாதமாய் இருக்கிறார்.மேலும்,அவ்விடத்தில் தனது அமைப்பிற்கு 6 இடம் வேண்டும் என்கிறார்.
அவர் கேட்கும் இடம் போலீஸ் தனது கூடாரத்தை அமைத்துள்ளது.அஃது மாநில அரசாங்கத்திற்கு சொந்தமான இடம்கூட இல்லை.அது மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இடம்.இந்நிலையில்,செலாயாங் நகராண்மைக்கழகம் மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்ததாக கூறப்படுவது அர்த்தமற்ற தகவல்.
மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கொடுக்கப்பட்ட இடத்தை நிறைவாக பெற்றுக் கொண்டதோடு தைப்பூசத்திற்கு எங்கு வியபாரம் செய்தாலும் நல்ல லாபத்தை காண முடியும்.தற்போது கொடுக்கப்பட்டுள்ள இடம் சிறப்பான இடமாகவே இருப்பதாக மாற்றுத்திறனாளியான செல்வராஜீ தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் செலாயாங் நகராண்மைக்கழகத்தையோ மாநில அரசாங்கத்தையோ குறைக்கூறுவது வஞ்சக போக்கினை கொண்டது.வேறு நோக்கத்தோடு உண்மையில்லா விடயத்தை பெரிதாக்கும் முயற்சி என்றும் ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்களின் வியபாரத்தை தொடங்கியுள்ள மாற்றுத்திறனாளிகள் கூறுகின்றனர்.