SELANGOR

ரவாங் கண்ட்ரி ஹோம்ஸ்ஸில் பொங்கல் திருநாளில் காலண்டர் விநியோகம்

ரவாங், ஜனவரி 14:

உலகத் தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, ரவாங் கண்ட்ரி ஹோம்ஸ் மையப் பகுதியில் ரவாங் சட்ட மன்ற உறுப்பினர் கான் பெய் நீ, செலாயாங் நகராண்மை கழக உறுப்பினர் ஆசிரியர் துரை ரத்தினம் மற்றும் சுங்கை பாக்காவ் இந்திய கிராமத்து தலைவர் திரு அச்சணன் நாயுடு ஆகியோர் தலைமையில் மாநில அரசாங்கத்தின் காலண்டர் வழங்கினர்.

கண்ட்ரி ஹோம்ஸ் சந்தை மற்றும் கடைகளில் காலண்டர் வழங்கியது மட்டுமில்லாமல் சட்ட மன்ற உறுப்பினர் கான் பெய் நீ மக்களிடம் நேரிடையாக களத்தில் இறங்கி நிலமையை கண்டறிந்தார். கடைகளில் காலண்டர் வழங்கி கொண்டிருக்கும் வேளையில் செல்வா முடித் திருத்தும் நிலையத்தில் பொங்கல் திருநாள் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. சிலாங்கூர் மாநிலத்தின் அரசாங்கத்தின் வார இதழான சிலாங்கூர் இன்றுவும் பொது மக்களுக்கு அளிக்கப்பட்டது.

#தமிழ் பிரியன்


Pengarang :