SELANGOR

பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டம் அனைத்து மலேசியரும் பயன் பெறலாம் !!!

ஷா ஆலம், மார்ச் 10:

பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டம் சிலாங்கூரில் மட்டுமில்லாமல் மலேசிய மக்கள் அனைவரும் பலன் அடையும் வகையில் இருக்கும். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி புத்ரா ஜெயா தலைமைத்துவத்தை கையில் எடுக்கும் சூழ்நிலையில் இது சாத்தியமாகும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இத்திட்டத்தின் கீழ் நாட்டு மக்களின் சுகாதார சுமையை  பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் மேலும் குறைக்கும் என்று தெரிவித்தார்.

”  இது பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் நிலைப்பாடு. புத்ரா ஜெயாவை இன்னும் கைப்பற்றவில்லை என்றாலும் சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது. பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டம் மக்களுக்கு குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சிறந்த பயன் தரும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

 

 

 

 

 


Pengarang :